என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வேலைக்கார பெண் கைது"
புதுச்சேரி:
புதுவை ரங்கப்பிள்ளை வீதியில் தனியார் அபார்ட் மெண்டில் வசித்து வருபவர் மேதாசாகூர். இவர் அரவிந்தர் ஆசிரமத்தில் கேண்டீனில் வேலை செய்து வருகிறார்.
இவரது மனைவி சத்ய பாமா சாகூர். இவர்களது வீட்டில் முத்தியால் பேட்டை அங்காளம்மன் நகர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த மேரிஜோஸ்பின் (36) என்பவர் வீட்டு வேலை செய்து வந்தார்.
சம்பவத்தன்று சத்ய பாமா சாகூர் தனது கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் செயினை கழற்றி கட்டிலில் வைத்திருந்தார். மறுநாள் அந்த செயினை காணாமல் சத்யபாமா சாகூர் அதிர்ச்சி அடைந்தார். செயினை யாரோ திருடி சென்றிருப்பது தெரியவந்தது.
மேலும் செயின் திருட்டு போனது முதல் வீட்டு வேலை செய்ய மேரிஜோஸ் பின் வரவில்லை. இதனால் அவர் மீது சந்தேகம் அடைந்த சத்யபாமா சாகூர் இதுபற்றி பெரியகடை போலீசில் புகார் செய்தார்.
போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் முருகன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார். பின்னர் மேரி ஜோஸ்பினை போலீசார் பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்திய போது, அவர் செயினை திருடி சென்றதை ஒப்புக் கொண்டார்.
இதையடுத்து மேரி ஜோஸ்பினை கைது செய்து அவரிடம் இருந்து 2 பவுன் செயினை பறிமுதல் செய்தனர்.
சென்னை கே.கே.நகர் அழகிரிசாமி சாலையை சேர்ந்தவர் சென்னியப்பன் (வயது 48). தொழில் அதிபரான இவர் ஈக்காட்டுதாங்கல் பகுதியில் காற்றாலை உதிரிப்பாகங்கள் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார்.
சென்னியப்பன் வீட்டில் கடந்த 4 வருடங்களாக வேலைக்கார பெண்ணாக பணியாற்றி வருபவர் எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த அம்மு (38) சென்னியப்பன் நம்பிக்கையின் பேரில் வீட்டு சாவியை அம்முவிடம் கொடுத்து வைத்திருந்தார்.
இந்த நிலையில் வீட்டு பீரோவில் வைத்து இருந்த பணத்தில் ரூ.14 லட்சம் காணாமல் போனது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த சென்னியப்பன் கே.கே.நகர் போலீசில் புகார் அளித்தார்.
இன்ஸ்பெக்டர் பால முரளி வழக்குப்பதிவு செய்து வேலைக்கார பெண் அம்முவை கைது செய்தார். விசாரணையில் அம்மு பீரோவில் இருந்து சிறுக சிறுக பணத்தை திருடியது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Moneyrobbery
ஆறுமுகநேரி:
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டணம் ஆறாம்பள்ளி தெருவை சேர்ந்தவர் வாவு அப்துல்சலாம். இவருடைய மனைவி பாத்திமுத்து (வயது 78). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் வெளிநாட்டில் நகைக்கடை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வாவு அப்துல்சலாம் இறந்து விட்டார். இதனால் பாத்திமுத்து மற்றும் அவரது உறவினரான அதே பகுதியைச் சேர்ந்த அப்துல் கப்பார் (80) ஆகியோர் மட்டும் வீட்டில் வசித்து வந்தனர்.
காயல்பட்டினம் பெரிய நெசவு தெருவை சேர்ந்தவர் முகம்மது அசன். இவரது மனைவி கதிஜா (49). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கதிஜா கணவனை பிரிந்து வசித்து வந்தார். மேலும் பாத்திமுத்து வீட்டின் வேலைகளை கவனித்து வந்தார்.
இவர் தினமும் இரவு 9 மணிக்கு பாத்திமுத்து வீட்டிற்கு சென்று விட்டு மறுநாள் காலை 8 மணிக்கு தனது வீட்டிற்கு திரும்பி வருவது வழக்கம். வீட்டில் ஒருவர் போல கதீஜா பழகி வந்தார். இதனால் பாத்திமுத்துவின் வீட்டில் நகை இருக்கும் இடங்கள் மற்றும் அனைத்தும் அவருக்கு நன்கு தெரியும்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் வீட்டு வேலைகளை முடித்து விட்டு கதிஜா தனது வீட்டிற்கு நேற்று காலையில் புறப்பட்டு சென்றார். அவர் சென்ற பின்னர் பாத்திமுத்து தனது பீரோவை திறந்தார்.
அப்போது, அங்கு இருந்த நகைகள் சில மாயமாகி இருந்தன. இதனால் சந்தேகம் அடைந்த அவர் அதே பகுதியில் வசித்து வரும் தனது உறவினர் இஷாக் அகமது உதவியுடன் வெளிநாட்டில் இருக்கும் மகன்களிடம் நகைகளின் விவரங்களை கேட்டறிந்தார்.
அப்போது, பீரோவில் இருந்த 40 பவுன் நகைகளும், ரூ.2 லட்சமும் கொள்ளைபோனது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் இதுகுறித்து உடனடியாக ஆறுமுகநேரி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
இதுகுறித்து ஆறுமுகநேரி போலீசில் இஷாக் அகமது புகார் செய்தார். புகாரில் வீட்டு வேலைக்கார பெண்ணான கதிஜா நகை, பணத்தை எடுத்து சென்று இருக்கலாம் என்றுகூறியிருந்தார். இதையடுத்து போலீசார் கதீஜாவை பிடித்து சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் கதீஜா நகை, பணத்தை திருடியது உறுதியானது.
இதையடுத்து கதீஜாவை போலீசார் கைது செய்தனர். திருடிய நகைகளை கதீஜா அப்பகுதியில் உள்ள வங்கி லாக்கரில் வைத்திருப்பதாக தெரிவித்தார். இதை தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளார்கள். இதனிடையே கைதான கதிஜா அங்கு வேறு ஏதும் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளாரா என்று விசாரணை நடைபெற்று வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்